
நயன் கேட்ட இரண்டு கோடி பின்வாங்கிய ஹீரோ
மருதமலை உள்ளிட்ட எத்தனையோ வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை (விபரீத ஆசை). திருவண்ணாமலைக்கு பிறகு இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேளுங்களேன் என்றாராம் அர்ஜுன். அர்ஜுனின் சொல்லை மறுப்பேச்சு பேசாமல் செயல்படுத்த நினைத்தவர்கள், நயன்தாராவையே நேரடியாக அப்ரோச் செய்தார்களாம். விஷயத்தை சொன்னவர்களிடம், நயன்தாரா கேட்ட தொகைதான் தலைசுற்ற வைத்திருக்கிறது... இரண்டு கோடி கொடுத்தால் நடிக்க தயாரக உள்ளேன் என்றாராம். லிங்குசாமியின் படம் தாமதம் ஆவதால், மும்பைக்கே போய் ரெஸ்டில் இருக்கும் நயன், மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடித்துவிடுவது என்ற வெறியில் இருக்கிறார். இந்த நேரத்தில் அர்ஜுனுடன் ஜோடியாக நடிக்க அழைத்தால் ஒப்புக் கொள்வாரா? அதனால்தான் இப்படி ஒரு சம்பளத்தை கேட்டு மிரட்டியிருக்கிறார். இப்படி கேட்டதற்கு பேசாமல் நடிக்க விருப்பம் இல்லை என்று நேரடியாகவே சொல்லியிருக்கலாமே என்று முணுமுணுக்கிறது அர்ஜுன் மனது.....
No comments:
Post a Comment