
பார்த்தேன் ரசித்தேன்
நிறைய குடும்பங்களில் செக்ஸ் உறவு பிரச்சனையே தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. பொதுவாக கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கா. அவனுக்கு என்ன குறைச்சல், குரங்கு மாதிரி வப்பாட்டி வெச்சிருக்கானே பாவின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அழகான மனைவியை பார்த்தேன்.......ரசித்தேன் என்பதோடு மட்டும் நின்று விடலாமா? அடுத்தக் கட்டமான அன்பான, அழகான மனைவி தாம்பத்ய உறவிலும் கணவனது ஆசைகளுக்கு, ரசனைகளுக்கு ஒத்துபோக வேண்டுமே. அது தன் அழகான மனைவியிடம் கிடைக்காத பட்ஷத்தில் தனது செக்ஸ் ரசனைகளுக்கு ஒத்துப் போகிற பெண்ணுடன் அவன் சல்லாபிக்கிறான். அழகான மனைவியின் மனநிலை பல்வேறு காரணங்களால் தன் கணவனுக்கு அவன் இஷ்டப்படி இன்பங்களை வாரி வழங்க முடியவில்லை என்பதே உண்மை. 1. காதல் தோல்வி 2. கணவனது செக்ஸ் தொல்லை அல்லது வெறுப்பு 3. வெளிப்புறத் தோற்றத்தில் அழகாக இருந்தாலும் உடல்நிலை கோளாறு. 4. சில பெண்களுக்கு உடலுறவின் போது எரிச்சல், பெயின் (வலி) 5. மனக்கவலை 6. மூட் இல்லாத நேரம். தாம்பத்ய உறவில் ஒரு பெண் தனது கணவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது என்பது அவளது சந்தோஷமான, கவலையற்ற மனநிலையைப் பொறுத்தது. இதில் அறுபது சதவீத பெண்கள் ஏதோ ஒரு மனவிரக்தியுடன் கணவனின் ஆசையை தீர்த்துக் கொள்ளவே தன்னை தயார்படுத்திக் கொண்டு ஒத்துழைக்கிறார்கள். அந்தி மாலைப் பொழுதில் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடி தன்னுடைய பார்ட்னரை மகிழ்வித்து அதன் பின் கூடி மகிழும். பெண் மயிலும் சந்தோஷ துள்ளலுடன் தோகையழகை ரசித்த போதையுடன் ஆண் மயிலின் தாகத்தை தணிக்கும். அதுப்போல தான் பெண்மையும். தன் மனத்தோடு ஒத்து போகும் கணவனுடன் தன்னை பகிர்ந்து கொள்வதில் அதிகமான ஈடுபாடு காட்டுவாள். பெண்மையை மகிழ்வித்து தானும் சந்தோஷ கடலில் மிதக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களோ மிகக் குறைவு. பெண் மனசு ஆழமுன்னு சொல்வாங்க. வெட்கம், நாணம் என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் பெண்மையின் அச்சத்தைப் போக்க வேண்டியது ஆண்மையின் கடமை. வெறுமனே மனைவியை தன் இஷ்டப்படி மனநிலை, உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் செக்ஸ் உறவுக்கு அழைப்பது ஆணுக்கு கிக்காக இருக்கலாம். ஆனால் மனைவியோ வெறுப்பின் உச்சத்திற்கே போய் விடுவாள். ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நேர்ந்து விடும். இதோ ஒரு உதாரணக்கதை....இருபத்தெட்டு வயது நிரம்பிய ஒரு லதாவின் கதை. அவளுடைய கணவர் என்ஜினியராக இருக்கிறார். அவருடைய புரபஷன்ல எப்படி எக்ஸ்பர்ட்டோ, அதுமாதிரி செக்ஸ் விஷயத்திலும் ஸ்பீட் அதிகம். கலகலவென்று பேசி யாரையும் தன் பக்கம் இழுத்திடுவார். அவருக்கு எந்த நேரத்தில் மூட் வரும்னு சொல்ல முடியாது. உடனே லதாவைக் கட்டாயபடுத்துவார். சில சமயங்கள்ல மட்டும் கோ-ஆபரேட் பண்ணுவாள் லதா. பல சந்தர்ப்பங்களில் அவரைத் திட்டி ஒதுக்கிவிடுவாள். அதுக்கு காரணம் அவளுக்கு பெயின் ஜாஸ்தியா இருக்கும் அதை அவளுடைய கணவர் கேர் பண்ண மாட்டார். அந்த எரிச்சலில் அவருடன் செக்ஸ் ரிலேஷன்ஷிப் வச்சுக்கிறதை கொஞ்சம் கொஞ்சமாக அவாய்ட் பண்ணினாள். அது லதா லைப்புக்கே டேஞ்சராகி விட்டது. அவளுடைய பிரண்டு ரேவதி அடிக்கடி லதா வீட்டுக்கு வருவாள். அவளும் கலகலப்பா பேசுவாள். லதா ஹஸ்பண்டுக்கு அவளை அறிமுகம் செய்து வத்தாள். அவளுடைய ஹஸ்பண்டும், ரேவதியும் எல்லா சப்ஜெக்ட்டும் பேசுவாங்க. ஆனால் லதாவுக்கு புரியாது. லதவுக்கு தெரியாமலேயே ரேவதியும் அவள் ஹஸ்பண்டும் நெருங்கிட்டாங்க. வெளியே தனியாக ஹோட்டல் போய் வந்திருக்காங்க. திடீர்னு அவள் கணவரும் அவளை போர்ஸ் பண்றதில்லை. செக்ஸ் ரிலேஷனும் வைக்கவில்லை. அப்பாடி..... தொல்லை விட்டுப் போச்சுன்னு சந்தோஷப்பட்டு நிம்மதியாக இருந்தால் லதா. ஒரு நாள் ரேவதி வீட்டுக்கு போனாள் லதா. கதவும் திறந்தே இருந்தது. ரேவதியை கூப்பிட்டுக் கொண்டே பெட்ரூம் பக்கம் போனாள். அங்கே சிரிப்பு சத்தம் கேட்டது. லேசாக திறந்த ஜன்னல் வழியா பார்த்தாள் அங்கே லதாவின் ஹஸ்பண்டும், ரேவதியும் அவள் கற்பனை பண்ணமுடியாத ஒரு ஆக்ஷன்ல ஈடுபட்டிருந்தாங்க. வாயைப் பொத்திக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து கதறி அழுதாள் லதா. இனியும் அவர் கூட வாழக்கூடாதுன்னு அவள் பேரண்ட்ஸ் வீட்டுக்கு போய்விட்டாள் லதா. அவளுடைய கணவர் ராமன் மாதிரி, என்னை தவிர வேற யாரையும் நினைச்சு பாக்க மாட்டார்ன்னு நினைச்ச லதாவின் நிலைமை?.... ஸோ....... தன் மனைவியிடம் மறுக்கப்பட்ட செக்ஸ் அவளது தோழி ரேவதியிடம் கிடைத்ததால் அவளுடைய தாவி விட்டார். அவரின் செக்ஸ் ஆசைகளுக்கு ரேவதியும் வளைந்து கொடுத்ததால் இருவரும் வேறு உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். அவர்களுடைய நட்பு இன்னும் தொடர்கிறது. பொதுவாக தடம் மாறும் ஆண்களின் மனதை கட்டுபடுத்தும் கடிவாளம் பெண்களின், மனைவியின் கைகளில் இருக்க வேண்டும். செக்ஸ் விஷயத்தில் கணவனின் போக்கை கண்காணித்து உங்கள் பக்கம் இழுத்தால் ஓ.கே. இல்லை!!!.. சில பெண்களோ.... எப்படியோ தன்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்று விட்டுவிட்டால் பெண்களின் லைப்பே அம்பேல். செக்ஸ் ரிலேஷனில் தனது கணவனின் ஆசையை தவிர்ப்பதில், தனது உடல் மனவலியை பொறுத்து கொண்டு கணவன் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்து கொள்ளும் சாமர்த்தியமான பெண்களும் உண்டு. அதே போல், தன் மனைவியின் ஆசையை, தாகத்தை புரிந்து கொள்ளாமல் ஜடமாக இருக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அதனால் பெண்மையே தடுமாறக்கூடிய சம்பவங்களும் நடக்கிறது..... எனவே கணவர்களும் மனைவிகளும் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment