எந்த உணவையும் நொறுங்கத் தின்றால் நூறு வயது இருக்கலாம் என்று அந்த காலத்திலேயே நமக்குக் கூறப்பட்ட ஒரு நியதியாகும்.
ஆனால் அதன் அடிப்படை என்னவென்று நமது யோகா ஆசிரியர் சுப்பிரமணியம் கூறுகிறார்.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று நாம் கூறுவதற்குக் காரணம், வாயில் போட்ட உணவு நன்றாக மென்று சாப்பிடடும்போது உணவு முழுக்க உமிழ் நீர் கலக்கிறது.
உமிழ் நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாக பணியாற்றக் கூடியது. எனவே, உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்.
அழகுக்கு அடிப்படை ஆரோக்கியம்தான்
http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0912/08/1091208006_1.htm
முகத்திற்கான பிளீச்சிங் பற்றி அறியலாம்
http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0912/04/1091204066_1.htm
புருவங்களை அழகாக்கும் முறைகள் என்னென்ன? (Today updated)
http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0912/09/1091209011_1.htm
Thursday, December 10, 2009
குடல் ஏற்றம் என்பது என்ன
பொதுவாக வயிற்றில் உள்ள குடல் இருக்கும் இடத்தில் இல்லாமல் இடம் மாறி இருப்பதை குடல் இறக்கம் அல்லது குடல் ஏற்றம் என கூறுகிறோம்.இதில் குடல் இறக்க நோய்க்கு ஆசனப் பயிற்சிகள் மூலமாக நிவாரணம் பெற இயலும். குடல் ஏற்றம் என்பது தானாகவே சரியாகக் கூடியது. ஏனெனில் நாம் நிற்கும் நிலையில் இருப்பதால் குடல் ஏற்றம் பொதுவாக தானாகவே சரியாகிவிடும்.ஆனால் சில சமயங்களில் இது தீவிரமாகும். ஒரு குடல் மேலிருக்கும் மற்றொரு குடல் மீது ஏறிக் கொண்டிருக்கும். குழந்தைகளுக்குத்தான் இந்த நோய் அதிகம் ஏற்படும்.கீழே விழுவது போன்ற சில செய்கைகளால் குடல் ஏற்றம் ஏற்படும். குடல் ஏற்றம் ஏற்பட்டுவிட்டால், உடலில் இருக்கும் சத்துகள் விரைவாக விரையமாகத் துவங்கிவிடும்.
குடல் ஏற்றம் ஏற்பட்ட இடத்தில் இருக்கும் குடல் பகுதி, உணவை முழுதாக ஜீரணிக்காமல், அதில் உள்ள சத்துக்களை பிரிக்காமல், ஏற்றம் ஏற்பட்ட குடல் பகுதிக்குள் உணவைத் வேகமாகத் தள்ளுவதிலேயே முழுக் கவனம் செலுத்தும். இதனால் சாப்பிடும் சாப்பாடு செரிக்காமல் குழந்தைக்கு பேதியாகும்.ஒருவேளை குடல் பகுதி வழியாக உணவு வெளியேறாத நிலையில் வாந்தி ஏற்படும். இந்த பிரச்சினை குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். பெரியவர்களுக்கு ஏற்படுவது மிகவும் அரிது. குழந்தைகளுக்கும் தலைகீழாக விழும் போது அல்லது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு எழும்பும் போது இதுபோன்று நேரிட வாய்ப்புள்ளது.இதற்கு பொதுவாக குழந்தைகளை தலைகீழாகப் போட்டு தட்டுவது, துணியில் போட்டு ஏற்றம் இறக்கமாக ஆட்டுவது போன்றவற்றை செய்வார்கள்.இதனையும் எளிதாக சரி செய்யலாம்.
குடல் ஏற்றம் ஏற்பட்ட இடத்தில் இருக்கும் குடல் பகுதி, உணவை முழுதாக ஜீரணிக்காமல், அதில் உள்ள சத்துக்களை பிரிக்காமல், ஏற்றம் ஏற்பட்ட குடல் பகுதிக்குள் உணவைத் வேகமாகத் தள்ளுவதிலேயே முழுக் கவனம் செலுத்தும். இதனால் சாப்பிடும் சாப்பாடு செரிக்காமல் குழந்தைக்கு பேதியாகும்.ஒருவேளை குடல் பகுதி வழியாக உணவு வெளியேறாத நிலையில் வாந்தி ஏற்படும். இந்த பிரச்சினை குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். பெரியவர்களுக்கு ஏற்படுவது மிகவும் அரிது. குழந்தைகளுக்கும் தலைகீழாக விழும் போது அல்லது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு எழும்பும் போது இதுபோன்று நேரிட வாய்ப்புள்ளது.இதற்கு பொதுவாக குழந்தைகளை தலைகீழாகப் போட்டு தட்டுவது, துணியில் போட்டு ஏற்றம் இறக்கமாக ஆட்டுவது போன்றவற்றை செய்வார்கள்.இதனையும் எளிதாக சரி செய்யலாம்.
அழகுக்கு அடிப்படை ஆரோக்கியம்தான்

ஒருவர் அழகாக இருக்கிறார் என்றால் அது அவர் செய்யும் அலங்காரத்தைப் பொருத்ததா? அல்லது அவரது உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்ததா?இப்படி கேட்டால் பெரும்பாலானவர்கள் கூறுவது ஆரோக்கியமாகத்தான் இருக்கும்.சரி நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா என்ன சொல்கிறார் என்று கேட்போம்.நிச்சயமாக உடல் ஆரோக்கியம் அவசியம். நாம் என்னதான் அழகாக்கிக் கொண்டாலும், நமது உடல் சோர்வாகவோ, நோய் வாய்ப்பட்டு இருந்தால் நம்மால் எப்படி அழகாகத் தோன்ற முடியும்.
WDமுதலில் நாம் போடும் மேக்கப்பை ஏற்றுக் கொள்ள நமது சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சருமம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் போடும் மேக்கப் சரியாக இருக்கும்.வீட்டிலிருக்கும் போது சருமத்தைக் காக்க மாஸ்சுரைஸிங் க்ரீம்கள் போட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடித்தாலே பருக்கள் வராது. எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமது சருமம் பொலிவாக இருக்கும்.பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். பழங்களை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறியாமல் அதன் தோலை மசித்து முகத்திற்கு போட்டால் அதுவும் ஒரு நல்ல பலனைத் தரும். இதற்கு 10 நிமிடம் போதும். வீட்டிலிருக்கும் போது பச்சரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு போன்று எதையாவது ஒரு பத்து நிமிடம் போட்டால் போதும், நமது சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.இதனை ஒரு நாள் போட்டுவிட்டால் போதாது, தொடர்ந்து போட வேண்டியது தான் மிகவும் முக்கியம்.
WDமுதலில் நாம் போடும் மேக்கப்பை ஏற்றுக் கொள்ள நமது சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சருமம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் போடும் மேக்கப் சரியாக இருக்கும்.வீட்டிலிருக்கும் போது சருமத்தைக் காக்க மாஸ்சுரைஸிங் க்ரீம்கள் போட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடித்தாலே பருக்கள் வராது. எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமது சருமம் பொலிவாக இருக்கும்.பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். பழங்களை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறியாமல் அதன் தோலை மசித்து முகத்திற்கு போட்டால் அதுவும் ஒரு நல்ல பலனைத் தரும். இதற்கு 10 நிமிடம் போதும். வீட்டிலிருக்கும் போது பச்சரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு போன்று எதையாவது ஒரு பத்து நிமிடம் போட்டால் போதும், நமது சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.இதனை ஒரு நாள் போட்டுவிட்டால் போதாது, தொடர்ந்து போட வேண்டியது தான் மிகவும் முக்கியம்.
Tuesday, December 8, 2009
முகத்திற்கான பிளீச்சிங் பற்றி அறியலாம்
பலரும் அழகு நிலையம் சென்று பிளீச்சிங் செய்து கொள்வோம், பேஷியல் செய்து கொள்வோம். இவற்றால் நம் முகம் அழகாகிறது என்று தெரியும். அதைப் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டாமா?அதற்காக தமிழ்.வெப்துனியா.காம் ஒரு அழகுக் கலை நிபுணரிடம் இது குறித்த விளக்கங்களைப் பெற்று உங்களுக்கு அளிக்கிறோம்.மஞ்சு மாதா என்ற அழகுக் கலை நிபுணர் 10 வருடங்களுக்கும் மேலாக இந்த பணியில் உள்ளார். மந்தைவெளியில் தனது வீட்டிலேயே ஒரு அழகு நிலையத்தையும் நடத்தி வரும் இவரிடம் நாம் கலந்துரையாடினோம்.பிளீச்சிங் என்பது எதற்காக செய்யப்படுவது?பிளீச்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்படுகின்றன. முகத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்பட்டாலே முகம் புதுப்பொலிவு பெறும். ஆனால் பலரும் பிளீச்சிங்கை விரும்புவதில்லை. ஏனெனில் அது சருமத்தின் நிறத்தையும், சருமத்தில் உள்ள ரோமங்களின் நிறத்தையும் மாற்றிவிடுவதுதான்.ஆனால் நீங்கள் எந்த விதமான பிளீச்சிங் செய்தாலும் நிச்சயமாக சருமத்தில் நிற மாற்றம் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது. ஏனெனில் பிளீச்சிங்கிற்காக பயன்படுத்தும் எந்த வொரு கிரீமிலும் ஏன் ஹேர்பல் முறையாக இருந்தாலும் அதில் 10 விழுக்காடாவது ரசாயனப் பொருள் கலந்திருக்கும். எனவே, அதன் விளைவால் நிற மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.இருந்தாலும் பிளீச்சிங் செய்துவிட்டு பிறகு பேஷியல் செய்தால் புதுப்பொலிவை நிச்சயமாகப் பெறலாம்.நிற மாற்றம் ஒன்றிற்காக பிளீச்சிங்கை யாரும் விரும்புவதில்லை. அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ப்ளீச்சிங் செய்வதால் சருமத்திற்கு எந்தக் கெடுதலும் இல்லையா?நல்ல நிறுவனத்தின் தரமானப் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்தால் நிச்சயமாக எந்த பின் விளைவும் ஏற்படாது. ஆனால் எந்த விதமான ப்ளீச்சிங் செய்தாலும் அதில் பயன்படுத்தும் க்ரீம்களின் தரம்தான் மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.சில இயற்கையான ப்ளீச்சிங்குகள் உள்ளன. வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களை கையாளலாம்.அதாவது நாட்டுத் தக்காளி, கஸ்தூரி மஞ்சள், பப்பாளி போன்றவற்றைத் தொடர்ந்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் நல்ல பலனை பெறலாம். ஆனால் இவற்றை தொடர்ந்து செய்தால் தான் பலன் உண்டு. 2, 3 முறை செய்துவிட்டால் எந்த மாற்றமும் ஏற்படாது.இப்போதிருக்கும் அவசர உலகத்தில் யாருக்கும் அவ்வளவு நேரம் இருப்பதில்லை. அப்படியிருக்கும் சூழ்நிலையில் அழகு நிலையத்திற்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வதுதான் நல்லது.பலரும் அழகு நிலையம் சென்று பிளீச்சிங் செய்து கொள்வோம், பேஷியல் செய்து கொள்வோம். இவற்றால் நம் முகம் அழகாகிறது என்று தெரியும். அதைப் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டாமா?அதற்காக தமிழ்.வெப்துனியா.காம் ஒரு அழகுக் கலை நிபுணரிடம் இது குறித்த விளக்கங்களைப் பெற்று உங்களுக்கு அளிக்கிறோம்.மஞ்சு மாதா என்ற அழகுக் கலை நிபுணர் 10 வருடங்களுக்கும் மேலாக இந்த பணியில் உள்ளார். மந்தைவெளியில் தனது வீட்டிலேயே ஒரு அழகு நிலையத்தையும் நடத்தி வரும் இவரிடம் நாம் கலந்துரையாடினோம்.பிளீச்சிங் என்பது எதற்காக செய்யப்படுவது?பிளீச்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்படுகின்றன. முகத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்பட்டாலே முகம் புதுப்பொலிவு பெறும். ஆனால் பலரும் பிளீச்சிங்கை விரும்புவதில்லை. ஏனெனில் அது சருமத்தின் நிறத்தையும், சருமத்தில் உள்ள ரோமங்களின் நிறத்தையும் மாற்றிவிடுவதுதான்.ஆனால் நீங்கள் எந்த விதமான பிளீச்சிங் செய்தாலும் நிச்சயமாக சருமத்தில் நிற மாற்றம் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது. ஏனெனில் பிளீச்சிங்கிற்காக பயன்படுத்தும் எந்த வொரு கிரீமிலும் ஏன் ஹேர்பல் முறையாக இருந்தாலும் அதில் 10 விழுக்காடாவது ரசாயனப் பொருள் கலந்திருக்கும். எனவே, அதன் விளைவால் நிற மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.இருந்தாலும் பிளீச்சிங் செய்துவிட்டு பிறகு பேஷியல் செய்தால் புதுப்பொலிவை நிச்சயமாகப் பெறலாம்.நிற மாற்றம் ஒன்றிற்காக பிளீச்சிங்கை யாரும் விரும்புவதில்லை. அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ப்ளீச்சிங் செய்வதால் சருமத்திற்கு எந்தக் கெடுதலும் இல்லையா?நல்ல நிறுவனத்தின் தரமானப் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்தால் நிச்சயமாக எந்த பின் விளைவும் ஏற்படாது. ஆனால் எந்த விதமான ப்ளீச்சிங் செய்தாலும் அதில் பயன்படுத்தும் க்ரீம்களின் தரம்தான் மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.சில இயற்கையான ப்ளீச்சிங்குகள் உள்ளன. வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களை கையாளலாம்.அதாவது நாட்டுத் தக்காளி, கஸ்தூரி மஞ்சள், பப்பாளி போன்றவற்றைத் தொடர்ந்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் நல்ல பலனை பெறலாம். ஆனால் இவற்றை தொடர்ந்து செய்தால் தான் பலன் உண்டு. 2, 3 முறை செய்துவிட்டால் எந்த மாற்றமும் ஏற்படாது.இப்போதிருக்கும் அவசர உலகத்தில் யாருக்கும் அவ்வளவு நேரம் இருப்பதில்லை. அப்படியிருக்கும் சூழ்நிலையில் அழகு நிலையத்திற்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வதுதான் நல்லது.ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?
WDபொதுவாக வேலை செய்யும் பெண்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். அதிகமாக மேக் அப் போடும் நபர்கள் அதாவது நடிகைகள் போன்றோர் 10 நாட்களுக்கு ஒரு முறை செய்வார்கள்.ஆனால், சருமத்தை சரியாக பராமரிப்பவர்கள், மாதத்திற்கு ஒரு முறை செய்தாலே போதுமானது. சருமயத்தில் அதிக ரோமங்கள் கொண்டவர்கள் ப்ளீச்சிங் செய்யலாமா?அவர்களும் செய்யலாம். ஆனால் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் இருக்கும் ரோமங்களும் நிறம் மாறி தனியாகத் தெரியும். இதனை பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படியானவர்கள் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் உள்ள ரோமங்களை த்ரட்டிங் முறையில் அகற்றிக் கொள்ளலாம். முதலில் முகத்தில் ரோமங்களுடன் பார்த்துவிட்டு பிறகு இல்லாமல் இருக்கும் போது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் ரோமங்கள் இருப்பவர்கள் ப்ளீச்சிங்
WDபொதுவாக வேலை செய்யும் பெண்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். அதிகமாக மேக் அப் போடும் நபர்கள் அதாவது நடிகைகள் போன்றோர் 10 நாட்களுக்கு ஒரு முறை செய்வார்கள்.ஆனால், சருமத்தை சரியாக பராமரிப்பவர்கள், மாதத்திற்கு ஒரு முறை செய்தாலே போதுமானது. சருமயத்தில் அதிக ரோமங்கள் கொண்டவர்கள் ப்ளீச்சிங் செய்யலாமா?அவர்களும் செய்யலாம். ஆனால் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் இருக்கும் ரோமங்களும் நிறம் மாறி தனியாகத் தெரியும். இதனை பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படியானவர்கள் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் உள்ள ரோமங்களை த்ரட்டிங் முறையில் அகற்றிக் கொள்ளலாம். முதலில் முகத்தில் ரோமங்களுடன் பார்த்துவிட்டு பிறகு இல்லாமல் இருக்கும் போது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் ரோமங்கள் இருப்பவர்கள் ப்ளீச்சிங்
Tuesday, April 21, 2009
Subscribe to:
Posts (Atom)