Saturday, November 29, 2008

கீர்த்தி சாவ்லா


காத்திருக்கும் கீர்த்தி
அழகு, நடிப்பு, நடனம், கவர்ச்சி என சகலகலா வல்லியாக திகழ்ந்தும் கூட கீர்த்தி சாவ்லா இரு படங்களை ரொம்ப ஆர்வமாக எதி்ர்பார்த்திருக்கிறார். இரு படங்களும் தன்னை பெரிய உயரத்திற்குக் கொண்டு போகும் என்ற நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார். உளியின் ஓசையில் நடிப்பில் கலக்கினார். நாயகன் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வந்து போனார். இந்த நிலையில் இப்போது மகேஷ், சந்தியா மற்றும் பலர் படத்தையும், திருமதி தமிழ் படத்தையும் ரொம்பவே ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார். திருமதி தமிழ் படம்தான் கீர்த்திக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவயானி தயாரிக்க, அவரது கணவர் ராஜகுமாரன் நடித்து, இயக்கும் படம். இப்படத்தில் தேவயானி நீதிபதியாக வருகிறாராம். இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையைக் கொண்டது. இதுதான் கீர்த்தியின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். இந்த படத்தில் பிருத்விராஜ் நெகட்டிவ் கேரக்டரில் வருகிறார். இந்த வருடம் கீர்த்திக்கு கீர்த்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

No comments:

Post a Comment