
திவ்யாவின் காதல் 2 கல்யாணம்
குத்து படத்தில் நடித்த ரம்யா இப்பொழுது வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து காதல் 2 கல்யாணம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். மணிரத்தினத்தின் முன்னாள் உதவியாளரான மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகன், புதுமுகம் ஷஹிர்.ஓகனேக்கல் விவகாரத்தில் கன்னடத் திரையுலகினர் தமிழ்த் திரையுலகினரைக் கண்டித்து போட்டி உண்ணாவிரதம் நடத்தியபோது அதில் கர்நாடகாவில் முதல் ஆளாக கலந்து கொண்டவர் திவ்யா. இதற்காக அவருக்கு நடிகர் சங்கம் ரெட் கார்டு போட்டது. அதனால் தமிழ் படங்களில் நடிக்க கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. இருப்பினும் தனது நிலையை விளக்கி திவ்யா நடிகர் சங்கத்திடம் கடிதம் கொடுத்தார். இதையடுத்து அவர் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க நடிகர் சங்கம் அறிவித்தது. அதனால் இதனை தொடர்ந்து திவ்யாவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் நிறைய வந்து கொண்டு இருக்கிறது. வாரணம் ஆயிரம் படம் சிறப்பாக வந்து கொண்டு இருப்பதால் அடுத்து காதல் 2 கல்யாணம் படத்தில் புக் ஆகி உள்ளார்.
No comments:
Post a Comment