Sunday, November 23, 2008

நடுக்கடலில் தத்தளித்த நமீதா


நடுக்கடலில் நமீதா
30வருடங்களுக்கு முன்பு ஜெயமாலினி நடித்து வெளிவந்த படம் ஜெகன்மோகினி. இப்பொழுது இந்த படத்தை என்.கே.விஸ்வனாதன் நமீதாவை வைத்தி ரீமேக் செய்கிறார். இந்த படத்தை இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பெண்ணாக வருகிறார் நமீதா. ஏற்கனவே இராமேஸ்வரம் பகுதியில் பாதி படம் எடுத்து விட்டதால் மீதி படத்தை அந்தமான் தீவு பகுதியில் படமாக்கப்பட்டன. இதில் இரண்டு கப்பல்களை வாடகைக்கு எடுத்திருந்தனர். இதில் ஒரு கப்பலில் கடல் கொள்ளையர்கள் இருப்பது போலவும், இன்னொரு கப்பலில் கதாநயகன் ராஜாவும், நமீதாவும் இருப்பது போலவும் படமாக்கப்பட்டன. அடிக்கடி நீ்ர் மட்டம் மாறுபடும் தீவுப் பகுதியி்ல் அந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் ஏற்பட்ட விளைவு தான் இது. அப்போது கடலில் நீர்மட்டம் அதிக அளவில் குறைந்ததால் நமீதா உள்ளிட்டோர் பயணம் செய்த கப்பல் நகர முடியாமல் நின்றது. நமீதா 4 மணி நேரம் நடுக்கடலில் தவித்தார். உடனே செல்போன் மூலம் கரையிலிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் உடனே அந்த இடத்துக்கு விசைப்படகுகளில் விரைந்து வந்து நமீதாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

No comments:

Post a Comment