Monday, November 3, 2008

மீராஜாஸ்மின் பிடிவாதம்



11 மணிக்கு மேல்தான் கால்ஷீட்!மீராஜாஸ்மின் பிடிவாதம்





ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மீராஜாஸ்மினை தனது 'அனந்தபுரம்' படத்தில் ஒப்பந்தம் செய்திருந்ததும், பின்பு அவர் நீக்கப்பட்டதும், தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த விஷயம்தான். ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கு தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்ட காரணம், மீரா படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வருவதில்லை என்பதுதான்.



அதன்பின் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் ஒரு நிபந்தனையை விதிக்கிறார் மீராஜாஸ்மின். படப்பிடிப்புக்கு காலை பதினொரு மணிக்குதான் வருவேன். அதற்கு சம்மதம் என்றால் கால்ஷீட். இல்லையென்றால் வேறு நடிகையை பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான் அந்த நிபந்தனை.படப்பிடிப்புக்கு ஏன் லேட்டாக வருகிறார் என்பதற்கு காரணங்கள் இப்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. மீராவுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கிறதாம். காலை பத்து மணிக்கு முன்பு படுக்கையை விட்டு எழுந்தால், அன்று முழுவதும் முகம் வீங்கியே காணப்படுமாம். இதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் அவர் தவிப்பதாகவும் சொல்கிறார்கள்.அடப்பாவமே!

சௌரே பிரோம்: http://femina.mywebdunia.com/

No comments:

Post a Comment