Monday, December 8, 2008

ஜெய் விஜயலட்சுமி

ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்கள் ஜெய்யும், இவருடன் 'அதே நேரம் அதே இடம்' படத்தில் இணைந்து நடிக்கும் விஜயலட்சுமியும். இதற்கு முன்பே இருவரை பற்றியும் அரசல் புரசலாக கிசுகிசு எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களை பற்றி கவலைப்படாமல் நேராக ஜெய் பக்கத்தில் போய் நின்று கொண்டார் விஜயலட்சுமி. அடிக்கடி இருவரும் ஒருவர் காதில் மற்றவர் கிசுகிசுத்துக் கொண்டார்கள். இன்னும் ஒட்டி நில்லுங்க... போட்டோ எடுக்கணும் என்று போட்டோகிராபர்கள் கேட்க, உடனே விஜயலட்சுமின் தோள் மீதே கையை போட்டுக் கொண்டார் ஜெய். போதுமா இந்த போஸ் என்று போட்டோகிராபர்களை பார்த்து கேட்டாராம். விழாவில் பேசிய வெங்கட்பிரபு சென்னை 28, சுப்ரமணியபுரம் படங்களுக்கு பிறகு ரொம்ப பிசியாகிட்டார் ஜெய். நான் என் படத்திற்கு கால்ஷீட் கேட்டபோது, இனிமே 2010 ல்தான் கால்ஷீட் என்று சொல்லிவிட்டார் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சான்ஸ் வாங்கிக்கொடுத்தவருக்கே இந்த நிலைமை!!!!!.......

No comments:

Post a Comment